வலந்த வள்ளி
|
|
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
|
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும்
பொங்கர்ப்
|
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
|
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
|
5
|
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
|
|
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
|
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
|
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
|
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என
அன்னைக்கு
|
10
|
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என
|
|
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
|
|
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை
|
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள்
|
|
ஆய்மலர் உண்கண் பசலை
|
15
|
காம நோய்' எனச் செப்பாதீமே.
|
தலைமகள் வேறுபட்டமை அறிந்த
செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு
நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. -
நொச்சிநியமங் கிழார்
|
|
மேல் |