இருப்பை |
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், |
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த |
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, |
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, |
|
5 |
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் |
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, |
|
ஆலி வானின் காலொடு பாறி, |
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், |
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் |
|
10 |
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய |
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, |
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் |
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, |
|
15 |
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, |
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் |
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் |
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, |
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
20 |
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, |
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, |
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ |
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், |
|
25 |
அம் தீம் கிளவிக் குறுமகள் |
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |
|
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
எம் வெங் காமம் இயைவது ஆயின், |
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் |
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த |
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் |
|
5 |
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, |
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் |
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர், |
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல |
|
தோழிமாரும் யானும் புலம்ப, |
|
10 |
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் |
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் |
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, |
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் |
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, |
|
15 |
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, |
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் |
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு |
|
குன்ற வேயின் திரண்ட என் |
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே! |
|
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் |
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், |
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை |
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, |
|
5 |
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் |
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை |
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள |
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் |
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் |
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் |
|
மை எழில் உண்கண் கலுழ |
|
15 |
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், |
|
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; |
|
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்; |
|
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் |
|
5 |
எவனோ? வாழி, தோழி! பொரிகால் |
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற |
|
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ, |
|
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க, |
|
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும் |
|
10 |
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், |
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர் |
|
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ |
|
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ, |
|
நம் உணர்ந்து ஆறிய கொள்கை |
|
15 |
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே? |
போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
|
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
|
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
|
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, |
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் |
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, |
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, |
|
5 |
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, |
பேதுற்றிசினே காதல்அம் தோழி! |
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, |
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, |
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் |
|
10 |
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், |
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, |
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த |
|
கழுவுள் காமூர் போலக் |
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர் | |
உரை |
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த |
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், |
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் |
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் |
|
5 |
அத்த நீள் இடைப் போகி, நன்றும் |
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் |
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் |
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, |
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம் |
|
10 |
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் |
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, |
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய |
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் |
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, |
|
15 |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, |
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, |
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து |
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும் |
|
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
பணை எழில் அழிய வாடும்; நாளும் |
|
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது |
|
5 |
இனையல் வாழி, தோழி! புணர்வர் |
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து |
|
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த |
|
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் |
|
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார், |
|
10 |
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை |
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின், |
|
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப் |
|
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய, |
|
கருங் கோட்டு இருப்பை ஊரும் |
|
15 |
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார் | |
உரை |
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், |
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், |
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, |
|
இன்றே இவணம் ஆகி, நாளை, |
|
5 |
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற |
அகலா அம் துளை, கோடை முகத்தலின், |
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் |
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், |
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, |
|
10 |
யாத்த தூணித் தலை திறந்தவைபோல், |
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் |
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, |
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் |
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை |
|
15 |
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
செறி தொடி முன்கை, நம் காதலி |
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை |
|
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் |
|
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து, |
|
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை, |
|
5 |
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், |
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும் |
|
அரிய கானம் என்னார், பகை பட |
|
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக் |
|
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் |
|
10 |
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, |
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின் |
|
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக் |
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார் | |
உரை |
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து, |
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து, |
|
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி, |
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து, |
|
5 |
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, |
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை, |
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ |
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர, |
|
மை பட்டன்ன மா முக முசுவினம் |
|
10 |
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென |
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய், |
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் |
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் |
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும் |
|
15 |
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை |
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த, |
|
தோளே தோழி! தவறு உடையவ்வே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, |
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த |
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி, |
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி! |
|
5 |
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என, |
யாம் தற் கழறுங் காலை, தான் தன் |
|
மழலை இன் சொல், கழறல் இன்றி, |
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் |
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், |
|
10 |
ஏதிலாளன் காதல் நம்பி, |
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் |
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும் |
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய, |
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், |
|
15 |
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி |
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும் |
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள் |
|
செம் புடைச் சிறு விரல் வரித்த |
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
பசித்த யானைப் பழங்கண் அன்ன |
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி |
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, |
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு |
|
5 |
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, |
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் |
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர் |
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், |
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் |
|
10 |
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், |
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? |
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு |
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? |
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! |
|
15 |
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, |
யாய் அறிவுறுதல் அஞ்சி, |
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, |
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, |
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் |
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் |
|
5 |
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் |
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, |
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் |
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, |
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், |
|
10 |
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, |
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், |
|
வேளிரொடு பொரீஇய, கழித்த |
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே! |
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி, |
|
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப, |
|
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு |
|
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் |
|
5 |
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற, |
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை, |
|
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில், |
|
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம், |
|
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய |
|
10 |
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி, |
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண் |
|
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப, |
|
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி, |
|
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை, |
|
15 |
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என |
உள்ளுதொறு படூஉம் பல்லி, |
|
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே? |
|
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார் | |
உரை |
மேல் |