இலவம் |
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் |
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு, |
|
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் |
|
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த |
|
5 |
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, |
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் |
|
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென, |
|
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் |
|
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர், |
|
10 |
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் |
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர, |
|
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து |
|
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் |
|
அழுதல் மேவல ஆகி, |
|
15 |
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், |
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், |
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ, |
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, |
|
5 |
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, |
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் |
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி |
|
10 |
வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், |
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, |
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி |
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், |
|
15 |
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து |
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், |
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், |
|
20 |
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
வைகுறு மீனின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை |
|
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய, |
|
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து, |
|
இரும்பின் இன் உயிர் உடையோர் போல, |
|
5 |
வலித்து வல்லினர், காதலர்; வாடல் |
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர் |
|
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய, |
|
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் |
|
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து |
|
10 |
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், |
பெரு விழா விளக்கம் போல, பல உடன் |
|
இலை இல மலர்ந்த இலவமொடு |
|
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் |
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என |
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் |
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, |
|
5 |
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை |
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற, |
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, |
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், |
|
10 |
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
கான யானை வெண் கோடு சுட்டி, |
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் |
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, |
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து |
|
15 |
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், |
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் |
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, |
|
20 |
அம் மா அரிவை ஒழிய, |
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி, |
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர், |
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென, |
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் |
|
5 |
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், |
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை, |
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து |
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் |
|
காடு மிக நெடிய என்னார், கோடியர் |
|
10 |
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் |
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு, |
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின் |
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் |
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது, |
|
15 |
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் |
தண் பெரு படாஅர் வெரூஉம் |
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் | |
உரை |
மேல் |