குருந்தம் |
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், |
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் |
|
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து, |
|
5 |
ஆழல் வாழி, தோழி! 'சாரல், |
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, |
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை |
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் |
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, |
|
10 |
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை |
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை |
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, |
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், |
|
வருதும், யாம்' எனத் தேற்றிய |
|
15 |
பருவம்காண் அது; பாயின்றால் மழையே. |
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
|
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
|
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
|
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, |
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் |
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, |
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், |
|
5 |
வித்திய மருங்கின் விதை பல நாறி, |
இரலை நல் மானினம் பரந்தவைபோல், |
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர், |
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, |
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின் |
|
10 |
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, |
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை |
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக் |
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த |
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, |
|
15 |
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் |
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக் |
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி, |
|
விரிஉளை, நல் மான் கடைஇ |
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே. |
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார் | |
உரை |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
மேல் |