சந்தனம் (சாந்தம்) |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் |
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது |
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு |
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, |
|
5 |
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் |
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ் |
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு |
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ, |
|
10 |
அறியா வேலற் தரீஇ, அன்னை |
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, |
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், |
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை |
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், |
|
15 |
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் |
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி! |
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் |
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் |
|
20 |
சாந்த மென் சினை தீண்டி, மேலது |
பிரசம் தூங்கும் சேண் சிமை |
|
வரையக வெற்பன் மணந்த மார்பே! |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார் | |
உரை |
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, |
|
செறி மடை அம்பின், வல் வில், கானவன் |
|
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, |
|
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், |
|
5 |
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, |
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க |
|
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, |
|
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, |
|
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் |
|
10 |
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து |
|
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் |
|
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; |
|
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, |
|
15 |
யாயும், 'அவனே' என்னும்; யாமும், |
'வல்லே வருக, வரைந்த நாள்!' என, |
|
நல் இறை மெல் விரல் கூப்பி, |
|
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன் | |
உரை |
மத வலி யானை மறலிய பாசறை, |
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப, |
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு |
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள, |
|
5 |
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, |
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக் |
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட, |
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர் |
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து, |
|
10 |
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய, |
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின், |
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட |
|
போது உறழ் கொண்ட உண்கண் |
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே? |
|
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் | |
உரை |
மேல் |