131. பாலை |
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் |
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, |
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் |
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை |
|
5 |
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என |
வீளை அம்பின் விழுத் தொடை மழவர் |
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து |
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் |
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் |
|
10 |
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் |
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
வெருவரு தகுந கானம், 'நம்மொடு |
|
வருக' என்னுதிஆயின், |
|
15 |
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |