ஞாழல் |
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, |
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, |
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, |
|
5 |
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் |
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, |
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின் |
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, |
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் |
|
10 |
பல் பூங் கானல் அல்கினம் வருதல் |
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், |
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை |
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை, |
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென |
|
15 |
வலவன் ஆய்ந்த வண் பரி |
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே. |
|
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார் | |
உரை |
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, |
|
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் |
|
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, |
|
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் |
|
5 |
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே |
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, |
|
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே |
|
வதுவை கூடிய பின்றை, புதுவது |
|
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் |
|
10 |
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் |
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் |
|
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் |
|
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி |
|
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை, |
|
15 |
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த |
பல் வீழ் ஆலம் போல, |
|
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
|
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
உரை |
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, |
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, |
|
வீ ததை கானல் வண்டல் அயர, |
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, |
|
5 |
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, |
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, |
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே |
|
10 |
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் |
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, |
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் |
|
பொன் நேர் நுண் தாது நோக்கி, |
|
15 |
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் |
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், |
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, |
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் |
|
5 |
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் |
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் |
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; |
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், |
|
கழனி உழவர் குற்ற குவளையும், |
|
10 |
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, |
பல் இளங் கோசர் கண்ணி அயரும், |
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் |
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் |
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய |
|
15 |
பெருங் களிற்று எவ்வம் போல, |
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் | |
உரை |
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் |
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை |
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, |
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் |
|
5 |
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் |
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, |
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் |
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, |
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும், |
|
10 |
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, |
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, |
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட |
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், |
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில், |
|
15 |
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. |
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார் | |
உரை |
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், |
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து |
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் |
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே; |
|
5 |
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை |
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் |
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே, |
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான் |
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன, |
|
10 |
அம் மா மேனி தொல் நலம் தொலைய, |
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே, |
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் |
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை |
|
இன்னாது உயங்கும் கங்குலும், |
|
15 |
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. |
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார் | |
உரை |
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ, |
|
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று; |
|
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல், |
|
பகலே எம்மொடு ஆடி, இரவே, |
|
5 |
காயல் வேய்ந்த தேயா நல் இல் |
நோயொடு வைகுதிஆயின், நுந்தை |
|
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ |
|
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே, |
|
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல் |
|
10 |
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் |
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி, |
|
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு, |
|
நீயே கானல் ஒழிய, யானே |
|
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து, |
|
15 |
ஆடு மகள் போலப் பெயர்தல் |
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே! |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார் | |
உரை |
மேல் |