ஞெமை |
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் |
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி |
|
வருவர் வாழி, தோழி! அரச |
|
யானை கொண்ட துகிற் கொடி போல, |
|
5 |
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி |
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, |
|
மழை என மருண்ட மம்மர் பல உடன் |
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை |
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் |
|
10 |
அத்தக் கேழல் அட்ட நற் கோள் |
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, |
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, |
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட |
|
புண் தேர் விளக்கின், தோன்றும் |
|
15 |
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும் |
|
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
பணை எழில் அழிய வாடும்; நாளும் |
|
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது |
|
5 |
இனையல் வாழி, தோழி! புணர்வர் |
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து |
|
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த |
|
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் |
|
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார், |
|
10 |
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை |
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின், |
|
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப் |
|
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய, |
|
கருங் கோட்டு இருப்பை ஊரும் |
|
15 |
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார் | |
உரை |
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
|
5 |
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
|
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
|
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
|
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும், |
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும் |
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின், |
|
நாளது செலவும், மூப்பினது வரவும், |
|
5 |
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும், |
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை |
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென |
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை |
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல, |
|
10 |
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு, |
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி, |
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி, |
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து, |
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர, |
|
15 |
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து, |
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய |
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர், |
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத் |
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் |
|
20 |
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி, |
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை, |
|
நம்மொடு நன் மொழி நவிலும் |
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
தண் கயம் பயந்த வண் காற் குவளை |
|
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன, |
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் |
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின், |
|
5 |
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் |
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை |
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின், |
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை, |
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி, |
|
10 |
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, |
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் |
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும், |
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து, |
|
ஆடு கழை இரு வெதிர் நரலும் |
|
15 |
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! |
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
மேல் |