தாழை (கைதை) |
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, |
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, |
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, |
|
5 |
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் |
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, |
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின் |
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, |
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் |
|
10 |
பல் பூங் கானல் அல்கினம் வருதல் |
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், |
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை |
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை, |
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென |
|
15 |
வலவன் ஆய்ந்த வண் பரி |
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே. |
|
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார் | |
உரை |
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, |
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, |
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி |
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர, |
|
5 |
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
தாழை தளரத் தூக்கி, மாலை |
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் |
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய, |
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் |
|
10 |
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, |
|
வாரற்கதில்ல தோழி! கழனி |
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் |
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை |
|
15 |
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
அகமடல் சேக்கும் துறைவன் |
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார் | |
உரை |
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி |
|
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் |
|
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை, |
|
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ, |
|
5 |
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் |
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், |
|
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின், |
|
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ? |
|
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது |
|
10 |
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், |
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர், |
|
கருங் கட் கோசர் நியமம் ஆயினும், |
|
'உறும்' எனக் கொள்குநர்அல்லர் |
|
நறு நுதல் அரிவை பாசிழை விலையே. |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, |
|
புரையப் பூண்ட கோதை மார்பினை, |
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, |
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. |
|
5 |
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த |
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் |
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, |
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த |
|
10 |
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் |
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், |
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் |
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை |
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன |
|
15 |
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
வைகுறு விடியல் போகிய எருமை |
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும் |
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
|
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார் | |
உரை |
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று |
|
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ |
|
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை |
|
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, |
|
5 |
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை |
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் |
|
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, |
|
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் |
|
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் |
|
10 |
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் |
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை |
|
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் |
|
போது புறங்கொடுத்த உண்கண் |
|
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே. |
|
கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார் | |
உரை |
கானலும் கழறாது; கழியும் கூறாது; |
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; |
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; |
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் |
|
5 |
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, |
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, |
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே, |
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் |
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் |
|
10 |
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு |
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் |
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, |
|
'நின் உறு விழுமம் களைந்தோள் |
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. |
|
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | |
உரை |
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, |
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, |
|
வீ ததை கானல் வண்டல் அயர, |
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, |
|
5 |
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, |
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, |
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே |
|
10 |
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் |
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, |
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் |
|
பொன் நேர் நுண் தாது நோக்கி, |
|
15 |
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் |
|
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் |
|
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, |
|
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் |
|
5 |
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, |
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், |
|
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி, |
|
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க் |
|
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி, |
|
10 |
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் |
சாயல் மார்பின் பாயல் மாற்றி, |
|
'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச் |
|
செலவு அரிது என்னும்' என்பது |
|
பல கேட்டனமால் தோழி! நாமே. |
|
தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார் | |
உரை |
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், |
|
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், |
|
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், |
|
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் |
|
5 |
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு |
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! |
|
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, |
|
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் |
|
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், |
|
10 |
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? |
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; |
|
குப்பை வெண் மணற் குவவுமிசையானும், |
|
எக்கர்த் தாழை மடல்வயினானும், |
|
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, |
|
15 |
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த |
கடுஞ் செலல் கொடுந் திமில் போல, |
|
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் | |
உரை |
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, |
|
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, |
|
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, |
|
வலவன் வண் தேர் இயக்க, நீயும் |
|
5 |
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம |
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் |
|
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் |
|
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, |
|
கழியே ஓதம் மல்கின்று; வழியே |
|
10 |
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; |
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, |
|
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் |
|
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! |
|
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் |
|
15 |
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; |
வடவர் தந்த வான் கேழ் வட்டம் |
|
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய |
|
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் |
|
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் |
|
20 |
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், |
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை |
|
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, |
|
முன்றில் தாழைத் தூங்கும் |
|
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே? |
|
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும், |
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும் |
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின், |
|
நாளது செலவும், மூப்பினது வரவும், |
|
5 |
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும், |
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை |
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென |
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை |
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல, |
|
10 |
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு, |
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி, |
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி, |
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து, |
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர, |
|
15 |
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து, |
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய |
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர், |
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத் |
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் |
|
20 |
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி, |
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை, |
|
நம்மொடு நன் மொழி நவிலும் |
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும் |
|
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி, |
|
முன் நாள் போகிய துறைவன், நெருநை, |
|
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த |
|
5 |
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், |
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம் |
|
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என, |
|
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே; |
|
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; |
|
10 |
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது |
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்; |
|
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ? |
|
அம்ம, தோழி! கூறுமதி நீயே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |