நொச்சி |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல், |
|
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி; |
|
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை |
|
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, |
|
5 |
காடே கம்மென்றன்றே; அவல, |
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர், |
|
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை |
|
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ, |
|
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே; |
|
10 |
அனையகொல் வாழி, தோழி! மனைய |
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும் |
|
மௌவல், மாச் சினை காட்டி, |
|
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், |
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள், |
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை |
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, |
|
5 |
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, |
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் |
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், |
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச் |
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே |
|
10 |
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; |
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், |
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன் |
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, |
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல் |
|
15 |
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் |
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் |
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், |
|
வாணன் சிறுகுடி வடாஅது |
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - ......... | |
உரை |
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, |
|
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, |
|
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி |
|
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், |
|
5 |
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் |
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு |
|
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் |
|
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, |
|
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, | |
10 |
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, |
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, |
|
'தருமணற் கிடந்த பாவை என் |
|
அருமகளே என முயங்கினள் அழுமே! |
|
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ...... | |
உரை |
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும், |
|
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய் |
|
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர், |
|
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள் |
|
5 |
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், |
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும் |
|
யான் இவ் வறு மனை ஒழிய, தானே, |
|
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால் |
|
10 |
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற, |
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான் |
|
அன்னேன் அன்மை நன் வாயாக, |
|
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி |
|
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப் |
|
15 |
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர், |
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த, |
|
நுனை குழைத்து அலமரும் நொச்சி |
|
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே! |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர் | |
உரை |
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்; |
|
தாரும் தையின; தழையும் தொடுத்தன; |
|
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் |
|
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக் |
|
5 |
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் |
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன் |
|
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும், |
|
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள், |
|
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப் |
|
10 |
போது வந்தன்று, தூதே; நீயும் |
கலங்கா மனத்தை ஆகி, என் சொல் |
|
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி! |
|
தெற்றி உலறினும், வயலை வாடினும், |
|
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும், |
|
15 |
நின்னினும் மடவள் நனி நின் நயந்த |
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர் |
|
புலி மருள் செம்மல் நோக்கி, |
|
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே! |
|
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, |
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த |
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி, |
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி! |
|
5 |
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என, |
யாம் தற் கழறுங் காலை, தான் தன் |
|
மழலை இன் சொல், கழறல் இன்றி, |
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் |
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், |
|
10 |
ஏதிலாளன் காதல் நம்பி, |
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் |
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும் |
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய, |
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், |
|
15 |
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி |
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும் |
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள் |
|
செம் புடைச் சிறு விரல் வரித்த |
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, |
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, |
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, |
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, |
|
5 |
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், |
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் |
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, |
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை |
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
10 |
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், |
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன |
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் |
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம |
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் |
|
15 |
உயிர் குழைப்பன்ன சாயல், |
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |