பலா |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; |
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை; |
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; |
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; |
|
5 |
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! |
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, |
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, |
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை |
|
10 |
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் |
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, |
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, |
|
15 |
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, |
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு |
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, |
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், |
|
20 |
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் |
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார். | |
உரை |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
உரை |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; |
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, |
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; |
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், |
|
5 |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், |
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, |
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், |
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, |
|
10 |
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், |
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் |
|
நல் வரை நாட! நீ வரின், |
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
|
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு |
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், |
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் |
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, |
|
5 |
பாசி தின்ற பைங் கண் யானை |
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, |
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை |
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், |
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் |
|
10 |
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் |
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த |
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், |
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, |
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை, |
|
15 |
தட மருப்பு எருமை தாமரை முனையின், |
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், |
|
குடநாடு பெறினும் தவிரலர் |
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து |
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, |
|
கடல் கண்டன்ன மாக விசும்பின் |
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, |
|
5 |
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, |
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், |
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, |
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை |
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; |
|
10 |
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என |
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், |
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், |
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், |
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, |
|
15 |
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, |
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி |
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய |
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் |
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் |
|
20 |
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, |
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் |
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர |
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, |
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன் |
|
25 |
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. |
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் |
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி |
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் |
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் |
|
5 |
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; |
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் |
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, |
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, |
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் |
|
10 |
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, |
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், |
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, |
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் |
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் |
|
15 |
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் |
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் |
|
மணி ஏர் மாண் நலம் சிதைய, |
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் | |
உரை |
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, |
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, |
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் |
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி, |
|
5 |
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
வேட்டம் போகிய குறவன் காட்ட |
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, |
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! |
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து |
|
10 |
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், |
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், |
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய |
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, |
|
15 |
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் |
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும் |
|
பெரு வரை நண்ணிய சாரலானே. |
|
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர் | |
உரை |
பசும் பழப் பலவின் கானம் வெம்பி, |
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி, |
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் |
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு |
|
5 |
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, |
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் |
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென, |
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற, |
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு |
|
10 |
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் |
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, |
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ் |
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம் |
|
தேர் ஊர் தெருவில் ததும்பும் |
|
15 |
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. |
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
யாம இரவின் நெடுங் கடை நின்று, |
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் |
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு |
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் |
|
5 |
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், |
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, |
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு |
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, |
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு |
|
10 |
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று |
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, |
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் |
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, |
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப, |
|
15 |
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் |
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், |
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை |
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் |
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, |
|
20 |
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, |
நல்கினள், வாழியர், வந்தே ஓரி |
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் |
|
கார் மலர் கடுப்ப நாறும், |
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே! |
|
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் |
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, |
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், |
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், |
|
5 |
நேரா எழுவர் அடிப்படக் கடந்த |
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என, |
|
ஆழல் வாழி, தோழி! அவரே, |
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி |
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் |
|
10 |
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து |
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல் |
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி |
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் |
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த |
|
15 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, |
நிலை பெறு கடவுள் ஆக்கிய, |
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார் | |
உரை |
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் |
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, |
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, |
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட, |
|
5 |
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான் |
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய, |
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல |
|
கழியாமையே, அழி படர் அகல, |
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப் |
|
10 |
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண், |
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை |
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி, |
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல் |
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க, |
|
15 |
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை |
கடி மனை மாடத்துக் கங்குல் வீச, |
|
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய, |
|
நிரை வளை ஊருந் தோள்' என, |
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, |
|
செறி மடை அம்பின், வல் வில், கானவன் |
|
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, |
|
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், |
|
5 |
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, |
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க |
|
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, |
|
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, |
|
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் |
|
10 |
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து |
|
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் |
|
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; |
|
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, |
|
15 |
யாயும், 'அவனே' என்னும்; யாமும், |
'வல்லே வருக, வரைந்த நாள்!' என, |
|
நல் இறை மெல் விரல் கூப்பி, |
|
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன் | |
உரை |
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து, |
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச் |
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ, |
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி |
|
5 |
ஏதில் வேலன் கோதை துயல்வரத் |
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்; |
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து, |
|
இரவின் மேயல் மரூஉம் யானைக் |
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள், |
|
10 |
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் |
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் |
|
உடு உறு கணையின் போகி, சாரல் |
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ, |
|
பலவின் பழத்துள் தங்கும் |
|
15 |
மலை கெழு நாடன் மணவாக்காலே! |
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, |
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண் |
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், |
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் |
|
5 |
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை |
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், |
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் |
|
புலம் கந்தாக இரவலர் செலினே, |
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் |
|
10 |
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் |
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, |
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு |
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் |
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, |
|
15 |
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! |
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன் |
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் |
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, |
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் |
|
20 |
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. |
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் |
|
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் |
|
வருவர் என்பது வாய்வதாக, |
|
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் |
|
5 |
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் |
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, |
|
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! |
|
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, |
|
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து |
|
10 |
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் |
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு |
|
ஆலி அழி துளி தலைஇக் |
|
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே! |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார் | |
உரை |
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், |
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், |
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் |
|
5 |
விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
முழவன் போல அகப்படத் தழீஇ, |
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன் |
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; |
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ |
|
10 |
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! |
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, |
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், |
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் |
|
15 |
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
புதுவது புனைந்த திறத்தினும், |
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
|
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார் | |
உரை |
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த |
|
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய, |
|
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி, |
|
5 |
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, |
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி |
|
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது, |
|
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும், |
|
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற் |
|
10 |
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் |
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி, |
|
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர் |
|
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை |
|
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் |
|
15 |
காலொடு துயல்வந்தன்ன, நின் |
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
|
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
|
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
|
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
|
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் | |
உரை |
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப; |
|
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்; |
|
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி, |
|
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் |
|
5 |
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, |
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத் |
|
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு |
|
அறியக் கூறல் வேண்டும் தோழி! |
|
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி |
|
10 |
செழுங் கோட் பலவின் பழம் புணையாக, |
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் |
|
வறன் உறல் அறியாச் சோலை, |
|
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே! |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
மேல் |