பனை(பெண்ணை,போந்தை) |
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, |
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, |
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி |
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர, |
|
5 |
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
தாழை தளரத் தூக்கி, மாலை |
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் |
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய, |
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் |
|
10 |
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, |
|
வாரற்கதில்ல தோழி! கழனி |
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் |
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை |
|
15 |
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
அகமடல் சேக்கும் துறைவன் |
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார் | |
உரை |
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, |
|
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்; |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்; |
|
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப, |
|
5 |
பகலும் நம்வயின் அகலானாகிப் |
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன், |
|
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, |
|
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது, |
|
மல்லல் மூதூர் மறையினை சென்று, |
|
10 |
சொல்லின் எவனோ பாண! 'எல்லி |
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் |
|
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என, |
|
கண் நிறை நீர் கொடு கரக்கும், |
|
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே. |
|
தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார் | |
உரை |
நெடு வேள் மார்பின் ஆரம் போல, |
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் |
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, |
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் |
|
5 |
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு |
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே |
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் |
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, |
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால் |
|
10 |
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி |
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, |
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, |
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ |
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை |
|
15 |
அன்றில் அகவும் ஆங்கண், |
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே? |
|
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
உரை |
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
|
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் | |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
|
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
|
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
|
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், |
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, |
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள், |
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த |
|
5 |
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, |
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற, |
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு, |
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி, |
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் |
|
10 |
பெருங் கல் நாட! பிரிதிஆயின், |
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு |
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும் |
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ், |
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி |
|
15 |
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, |
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் |
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த |
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே? |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
|
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
|
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
|
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் | |
உரை |
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, |
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய |
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், |
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென, |
|
5 |
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, |
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, |
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும் |
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன், |
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல், |
|
10 |
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் |
மணவா முன்னும் எவனோ தோழி! |
|
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் |
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, |
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் |
|
15 |
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, |
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே? |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
பகலினும் அகலாதாகி, யாமம் |
|
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய, |
|
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு |
|
பனி மீக்கூரும் பைதல் பானாள், |
|
5 |
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, |
பருகுவன்ன காதலொடு திருகி, |
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து, |
|
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ; |
|
அருளிலாளர் பொருள்வயின் அகல, |
|
10 |
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து |
யான் எவன் உளெனோ தோழி! தானே |
|
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், |
|
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய, |
|
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் |
|
15 |
கனை எரி பிறப்ப ஊதும் |
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே? |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
உரை |
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற |
|
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும், |
|
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து, |
|
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின், |
|
5 |
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு |
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும் |
|
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட, |
|
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின், |
|
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால், |
|
10 |
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! |
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப் |
|
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக் |
|
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க |
|
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த |
|
15 |
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து |
உரும் இசைப் புணரி உடைதரும் |
|
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே. |
|
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் |
|
ஆக மேனி அம் பசப்பு ஊர, |
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் |
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு |
|
5 |
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் |
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் |
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, |
|
நீடலர் வாழி, தோழி! கோடையில், |
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, |
|
10 |
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, |
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, |
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும் |
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, |
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என, |
|
15 |
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா |
நின் வாய் இன் மொழி நல் வாயாக |
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது, |
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம் |
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல |
|
20 |
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, |
மறுதரல் உள்ளத்தர்எனினும், |
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே. |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, |
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் |
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் |
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் |
|
5 |
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து |
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல, |
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, |
|
வந்த மாலை பெயரின், மற்று இவள் |
|
10 |
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா |
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, |
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் |
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, |
|
15 |
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை |
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என |
|
நல் மலர் நறு வீ தாஅம் |
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
|
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார் | |
உரை |
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப, |
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு |
|
சினவல் போகிய புன்கண் மாலை, |
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த |
|
5 |
கான யானைக் கதுவாய் வள் உகிர், |
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண், |
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை, |
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா |
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே |
|
10 |
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு |
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல் |
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண், |
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத் |
|
தண் கமழ் புது மலர் நாறும் |
|
15 |
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே. |
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
நகை நன்று அம்ம தானே 'அவனொடு, |
|
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து, |
|
கானல் அல்கிய நம் களவு அகல, |
|
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, |
|
5 |
நூல் அமை பிறப்பின், நீல உத்தி, |
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி, |
|
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை |
|
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக் |
|
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு |
|
10 |
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, |
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, |
|
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப் |
|
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க் |
|
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி, |
|
15 |
பால் கண்டன்ன ஊதை வெண் மணல், |
கால் கண்டன்ன வழி படப் போகி, |
|
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண், |
|
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு |
|
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, |
|
20 |
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, |
நேமி தந்த நெடுநீர் நெய்தல் |
|
விளையா இளங் கள் நாற, பலவுடன் |
|
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும் |
|
புதுவது ஆகின்று அம்ம பழ விறல், |
|
25 |
பாடு எழுந்து இரங்கு முந்நீர், |
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே! |
|
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார் | |
உரை |
மேல் |