மருதமரம் |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
உரை |
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் |
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் |
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், |
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, |
|
5 |
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, |
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை |
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் |
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து, |
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை |
|
10 |
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, |
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, |
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் |
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை |
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய |
|
15 |
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, |
மருதமர நிழல், எருதொடு வதியும் |
|
காமர் வேனில்மன் இது, |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! |
|
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; |
|
நாண் இலை மன்ற யாணர் ஊர! |
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, |
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், | |
5 |
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் |
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், |
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், |
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, |
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, |
|
10 |
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, |
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு |
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், |
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் |
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் |
|
15 |
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, |
போர் அடு தானைக் கட்டி |
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. |
|
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, |
|
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; |
|
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, |
|
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, |
|
5 |
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த |
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் |
|
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! |
|
விழையா உள்ளம் விழையும் ஆயினும், |
|
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு, |
|
10 |
அறனும் பொருளும் வழாமை நாடி, |
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் |
|
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்; |
|
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால், |
|
அரிய பெரியோர்த் தெரியுங்காலை, |
|
15 |
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன |
பொய்யொடு மிடைந்தவை தோன்றின், |
|
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே? |
|
'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார் | |
உரை |
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய |
|
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து, |
|
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி, |
|
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன் |
|
5 |
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின், |
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர் |
|
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ, |
|
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி, |
|
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு, |
|
10 |
நரை மூதாளர் கை பிணி விடுத்து, |
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் |
|
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன, |
|
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு, |
|
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை |
|
15 |
நீ தற் பிழைத்தமை அறிந்து, |
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே. |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
|
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
|
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
|
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |