மாமரம் |
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் |
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் |
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், |
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, |
|
5 |
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, |
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை |
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் |
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து, |
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை |
|
10 |
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, |
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, |
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் |
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை |
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய |
|
15 |
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, |
மருதமர நிழல், எருதொடு வதியும் |
|
காமர் வேனில்மன் இது, |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! |
|
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், |
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள், |
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை |
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, |
|
5 |
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, |
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் |
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், |
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச் |
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே |
|
10 |
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; |
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், |
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன் |
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, |
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல் |
|
15 |
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் |
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் |
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், |
|
வாணன் சிறுகுடி வடாஅது |
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - ......... | |
உரை |
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
|
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
|
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
|
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு |
|
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
|
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் | |
உரை |
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும், |
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப் |
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் |
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து |
|
5 |
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் |
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின் |
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் |
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை, |
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ, |
|
10 |
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை |
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் |
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், |
|
வல்லே வருவர்போலும் வெண் வேல் |
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர் |
|
15 |
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த |
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின் |
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின் |
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த |
|
அணங்குடை வன முலைத் தாஅய நின் |
|
20 |
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார் | |
உரை |
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் |
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, |
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி |
|
5 |
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், |
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, |
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் |
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, |
|
10 |
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் |
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, |
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி |
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி, |
|
15 |
இனையல் என்றி; தோழி! சினைய |
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் |
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, |
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, |
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் |
|
20 |
இன் இளவேனிலும் வாரார், |
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
உய் தகை இன்றால் தோழி! பைபய, |
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும் |
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; |
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் |
|
5 |
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், |
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், |
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, |
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, |
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் |
|
10 |
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், |
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், |
|
யாணர் வேனில்மன், இது |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே? |
|
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
என் ஆவதுகொல் தானே முன்றில், |
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, |
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, |
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, |
|
5 |
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் |
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் |
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், |
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, |
|
10 |
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
'யானை வவ்வின தினை' என, நோனாது, |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் |
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | |
உரை |
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும் |
|
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்; |
|
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை, |
|
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை |
|
5 |
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்; |
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர், |
|
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர் |
|
செழு மனை மறக்கும் செவ்வி வேனில் |
|
தானே வந்தன்றுஆயின், ஆனாது |
|
10 |
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் |
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி! |
|
'யாமே எமியம் ஆக, நீயே |
|
பொன் நயந்து அருள் இலையாகி, |
|
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே. |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
மேல் |