யா |
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், |
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், |
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ, |
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, |
|
5 |
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, |
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் |
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி |
|
10 |
வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், |
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, |
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி |
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், |
|
15 |
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து |
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், |
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், |
|
20 |
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
வைகுறு மீனின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி |
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து |
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, |
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் |
|
5 |
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், |
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, |
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே |
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் |
|
10 |
சேயிதழ் அனைய ஆகி, குவளை |
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, |
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, |
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் |
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென, |
|
15 |
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை |
பூ வீ கொடியின் புல்லெனப் போகி, |
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, |
|
இயங்காது வதிந்த நம் காதலி |
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! |
|
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார் | |
உரை |
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் |
|
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி, |
|
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என, |
|
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து, |
|
5 |
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து |
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு, |
|
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட, |
|
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும், |
|
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன |
|
10 |
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் |
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி, |
|
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு |
|
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத் |
|
தமிழ் கெழு மூவர் காக்கும் |
|
15 |
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. |
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, |
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய, |
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து |
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை, |
|
5 |
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் |
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் |
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் |
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள் |
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண் |
|
10 |
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் |
வெம் பரல் அதர குன்று பல நீந்தி, |
யாமே எமியம் ஆக, நீயே |
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது |
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை, |
|
15 |
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், |
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின் |
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல. |
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம் |
|
செய்வினை ஆற்றுற விலங்கின், |
|
20 |
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே? |
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, |
|
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, |
|
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, |
|
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, |
|
5 |
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி |
எருவைச் சேவல் கரிபு சிறை தீய, |
|
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, |
|
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி |
|
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் |
|
10 |
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, |
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் |
|
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும் |
|
மனைமுதல் வினையொடும் உவப்ப, |
|
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே. |
|
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார் | |
உரை |
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் |
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் |
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் |
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; |
|
5 |
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் |
பாடிச் சென்ற பரிசிலர் போல |
|
உவ இனி வாழி, தோழி! அவரே, |
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் |
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும் |
|
10 |
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, |
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் |
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, |
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை |
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன |
|
15 |
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, |
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் |
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள், |
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, |
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு |
|
20 |
அரியவால்' என அழுங்கிய செலவே! |
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
|
5 |
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
|
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
|
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
|
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
கான் உயர் மருங்கில் கவலை அல்லது, |
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர் |
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த, |
|
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய், |
|
5 |
பொறித்த போலும் வால் நிற எருத்தின், |
அணிந்த போலும் செஞ் செவி, எருவை; |
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து |
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட, |
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி |
|
10 |
கொல் பசி முது நரி வல்சி ஆகும் |
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப் |
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி, |
|
முருந்து ஏர் முறுவல், இளையோள் |
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே. |
|
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் |
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், |
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, |
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் |
|
5 |
பொம்மல் ஓதி பொதுள வாரி, |
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் |
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் |
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் |
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள |
|
10 |
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை |
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, |
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர் |
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், |
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, |
|
15 |
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் |
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், |
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு |
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, |
|
20 |
வெள் அரா மிளிர வாங்கும் |
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
|
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி, |
|
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம் |
|
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம் |
|
பயம் கெடத் திருகிய பைது அறு காலை, |
|
5 |
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு, |
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார், |
|
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி, |
|
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம் |
|
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு, |
|
10 |
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ! |
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் |
|
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க, |
|
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று |
|
திரு நுதல் பொலிந்த என் பேதை |
|
15 |
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே! |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, |
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, |
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, |
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் |
|
5 |
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் |
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, |
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து |
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை |
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, |
|
10 |
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, |
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த |
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, |
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை, |
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார் | |
உரை |
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் |
|
ஆக மேனி அம் பசப்பு ஊர, |
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் |
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு |
|
5 |
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் |
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் |
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, |
|
நீடலர் வாழி, தோழி! கோடையில், |
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, |
|
10 |
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, |
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, |
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும் |
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, |
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என, |
|
15
|
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா |
நின் வாய் இன் மொழி நல் வாயாக |
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது, |
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம் |
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல |
|
20 |
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, |
மறுதரல் உள்ளத்தர்எனினும், |
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே. |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த |
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி, |
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய, |
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின் |
|
5 |
அவணது ஆக, பொருள்' என்று, உமணர் |
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை, |
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் |
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி, |
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது |
|
10 |
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே |
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர், |
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி, |
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர, |
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ, |
|
15 |
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை, |
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை, |
|
கள்ளி நீழல் கதறுபு வதிய, |
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை, |
|
எமியம் கழிதந்தோயே பனி இருள் |
|
20 |
பெருங் கலி வானம் தலைஇய |
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே! |
|
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள், |
|
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை, |
|
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து, |
|
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப் |
|
5 |
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் |
கண்ணி வாடிய மண்ணா மருங்குல், |
|
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ் |
|
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் |
|
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண், |
|
10 |
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை, |
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார், |
|
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப் |
|
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த |
|
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி, |
|
15 |
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று |
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின் |
|
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண், |
|
சில் மொழிப் பொலிந்த துவர் வாய், |
|
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே. |
|
தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட, |
|
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப, |
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக் |
|
5 |
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் |
எளியவாக, ஏந்து கொடி பரந்த |
|
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத் |
|
தணிந்த பருவம் செல்லான், படர்தரத் |
|
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை |
|
10 |
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி, |
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப் |
|
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து, |
|
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும் |
|
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக் |
|
15 |
கோடை வெவ் வளிக்கு உலமரும் |
புல் இலை வெதிர நெல் விளை காடே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
மேல் |