வஞ்சி |
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் |
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், |
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, |
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் |
|
5 |
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் |
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் |
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; |
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், |
|
கழனி உழவர் குற்ற குவளையும், |
|
10 |
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, |
பல் இளங் கோசர் கண்ணி அயரும், |
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் |
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் |
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய |
|
15 |
பெருங் களிற்று எவ்வம் போல, |
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் | |
உரை |
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; |
|
நாண் இலை மன்ற யாணர் ஊர! |
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, |
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், |
|
5 |
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் |
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், |
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், |
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, |
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, |
|
10 |
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, |
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு |
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், |
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் |
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் |
|
15 |
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, |
போர் அடு தானைக் கட்டி |
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. |
|
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
மேல் |