வேலமரம்(உலவை) |
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், |
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, |
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல், |
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய |
|
5 |
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், |
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து |
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் |
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, |
|
களரி பரந்த கல் நெடு மருங்கின், |
|
10 |
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் |
மை படு திண் தோள் மலிர வாட்டி, |
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய |
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த |
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, |
|
15 |
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், |
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் |
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, |
|
மெல்லென் சேவடி மெலிய ஏக |
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து |
|
20 |
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், |
இடு மணற் பந்தருள் இயலும், |
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர் | |
உரை |
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை |
|
வலை வலந்தனைய ஆக, பல உடன் |
|
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின், |
|
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன |
|
5 |
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, |
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி, |
|
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி, |
|
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும் |
|
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே, |
|
10 |
செல்ப என்ப தோழி! யாமே, |
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த |
|
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து, |
|
இன்னா மொழிதும் என்ப; |
|
என் மயங்கினர்கொல், நம் காதலோரே? |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
மேல் |