308. குறிஞ்சி |
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் |
|
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் |
|
ஆலி அழி துளி பொழிந்த வைகறை, |
|
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், |
|
5 |
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, |
கலம் சுடு புகையின் தோன்றும் நாட! |
|
இரவின் வருதல் எவனோ? பகல் வரின், |
|
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை |
|
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, |
|
10 |
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, |
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் |
|
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய |
|
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, |
|
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய |
|
15 |
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, |
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே. |
|
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார் | |
உரை |
மேல் |