கோரை(பைஞ்சாய்) |
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன |
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், |
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், |
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன |
|
5 |
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு |
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி |
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, |
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், |
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று |
|
10 |
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, |
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் |
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற் |
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி |
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் |
|
15 |
கடவுள் எழுதிய பாவையின், |
மடவது மாண்ட மாஅயோளே. |
|
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; |
|
நாண் இலை மன்ற யாணர் ஊர! |
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, |
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், |
|
5 |
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் |
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், |
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், |
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, |
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, |
|
10 |
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, |
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு |
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், |
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் |
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் |
|
15 |
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, |
போர் அடு தானைக் கட்டி |
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. |
|
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
மேல் |