212. குறிஞ்சி |
தா இல் நல் பொன் தைஇய பாவை |
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, |
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், |
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற |
|
5 |
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், |
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் |
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, |
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று |
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், |
|
10 |
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், |
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே |
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு |
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, |
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, |
|
15 |
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை |
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் |
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, |
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, |
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய |
|
20 |
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் |
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது |
|
எளியள் அல்லோட் கருதி, |
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே. |
|
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர் | |
உரை |
மேல் |