129. பாலை |
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என |
|
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் |
|
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து |
|
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, |
|
5 |
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், |
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் |
|
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் |
|
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, |
|
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் |
|
10 |
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் |
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப, |
|
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், |
|
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும் |
|
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல் |
|
15 |
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், |
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என |
|
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் |
|
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
மேல் |