அதிரல் |
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட |
|
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த |
|
அரி நிறக் கலுழி ஆர மாந்தி, |
|
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர், |
|
5 |
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் |
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல் |
|
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி, |
|
கான யானை கவளம் கொள்ளும் |
|
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார் |
|
10 |
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி! |
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, |
|
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய், |
|
வினை அழி பாவையின் உலறி, |
|
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே! |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார் | |
உரை |
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ |
|
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப, |
|
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் |
|
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ, |
|
5 |
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து |
இன்னா கழியும் கங்குல்' என்று நின் |
|
நல் மா மேனி அணி நலம் புலம்ப, |
|
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல் |
|
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை |
|
10 |
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு, |
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின் |
|
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு, |
|
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் |
|
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும், |
|
15 |
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து |
ஐய அமர்த்த உண்கண் நின் |
|
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார் | |
உரை |
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் |
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் |
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும் |
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின், |
|
5 |
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், |
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, |
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது |
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி |
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த |
|
10 |
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, |
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப, |
|
மை அற விரிந்த படை அமை சேக்கை |
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ, |
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் |
|
15 |
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, |
'நல்ல கூறு' என நடுங்கி, |
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன |
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் |
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் |
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் |
|
5 |
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, |
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் |
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் |
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி! |
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி |
|
10 |
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ |
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் |
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை |
|
குன்று புகு பாம்பின் தோன்றும், |
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
மேல் |