பீர்க்கு |
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின் |
|
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு |
|
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை, |
|
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே |
|
5 |
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப் |
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் |
|
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து |
|
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் |
|
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ, |
|
10 |
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், |
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை |
|
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி |
|
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென, |
|
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து |
|
15 |
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று |
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் |
|
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், |
|
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க் |
|
கூர் முகச் சிதலை வேய்ந்த |
|
20 |
போர் மடி நல் இறைப் பொதியிலானே? |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார் | |
உரை |
மேல் |