அடும்புப்பூ |
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் |
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் |
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! |
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை |
|
5 |
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த |
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். |
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை |
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் |
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, |
|
10 |
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, |
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் |
|
தண் நறும் பைந் தாது உறைக்கும் |
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் | |
உரை |
மேல் |