இலவம்பூ |
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
|
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
|
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
|
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
இலமலர் அன்ன அம் செந் நாவின் |
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, |
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் |
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் |
|
5 |
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற |
குறையோர் கொள்கலம் போல, நன்றும் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி |
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற |
|
கறை அடி யானை நன்னன் பாழி, |
|
10 |
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் |
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி |
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் |
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து |
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், |
|
15 |
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, |
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் |
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை |
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், |
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, |
|
20 |
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை |
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, |
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை |
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, |
|
25 |
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; |
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் |
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என |
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் |
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, |
|
5 |
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை |
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற, |
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, |
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், |
|
10 |
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
கான யானை வெண் கோடு சுட்டி, |
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் |
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, |
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து |
|
15 |
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், |
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் |
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, |
|
20 |
அம் மா அரிவை ஒழிய, |
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |