ஈங்கை |
அவரை ஆய் மலர் உதிர, துவரின |
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, |
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் |
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, |
|
5 |
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு |
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி |
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக் |
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை! |
|
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப் |
|
10 |
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை |
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை |
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல; |
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது |
|
நமக்கே எவ்வம் ஆகின்று; |
|
15 |
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! |
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் | |
உரை |
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, |
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் |
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, |
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் |
|
5 |
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, |
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை |
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் |
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, |
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் |
|
10 |
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, |
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், |
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி, |
|
நம் நோய் அறியா அறனிலாளர் |
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என |
|
15 |
ஆனாது எறிதரும் வாடையொடு |
நோனேன் தோழி! என் தனிமையானே. |
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! |
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய |
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ |
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, |
|
5 |
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, |
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும் |
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! |
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட |
|
10 |
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி |
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த |
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, |
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு |
|
ஊடினள் சிறு துனி செய்து எம் |
|
15 |
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
மேல் |