எருக்கம்பூ |
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி, |
|
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் |
|
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி! |
|
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் |
|
5 |
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, |
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன |
|
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து, |
|
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை, |
|
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி, |
|
10 |
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, |
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி |
|
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ, |
|
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் |
|
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை, |
|
15 |
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, |
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக் |
|
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, |
|
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் |
|
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து, |
|
20 |
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு |
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென, |
|
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர், |
|
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த |
|
புன் தலை மன்றம் காணின், வழி நாள், |
|
25 |
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்; |
அதுவே மருவினம், மாலை; அதனால், |
|
காதலர் செய்த காதல் |
|
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார் | |
உரை |
மேல் |