கரும்புப்பூ |
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் |
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி, |
|
குறவர் தந்த சந்தின் ஆரமும், |
|
5 |
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் |
|
குழியில் கொண்ட மராஅ யானை |
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, |
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், |
|
10 |
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், |
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, |
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, |
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், |
|
15 |
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, |
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல், |
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற |
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் |
|
20 |
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, |
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த |
|
வெண் குருகு நரல, வீசும் |
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
|
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து |
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், |
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? |
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, |
|
5 |
விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, |
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி |
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, |
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ |
|
10 |
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் |
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ |
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, |
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, |
|
15 |
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, |
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு |
|
தொல் நலம் சிதையச் சாஅய், |
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மேல் |