கருவிளை |
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் |
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, |
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, |
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட, |
|
5 |
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான் |
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய, |
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல |
|
கழியாமையே, அழி படர் அகல, |
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப் |
|
10 |
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண், |
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை |
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி, |
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல் |
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க, |
|
15 |
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை |
கடி மனை மாடத்துக் கங்குல் வீச, |
|
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய, |
|
நிரை வளை ஊருந் தோள்' என, |
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, |
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் |
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, |
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் |
|
5 |
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, |
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை |
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் |
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, |
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் |
|
10 |
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, |
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், |
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி, |
|
நம் நோய் அறியா அறனிலாளர் |
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என |
|
15 |
ஆனாது எறிதரும் வாடையொடு |
நோனேன் தோழி! என் தனிமையானே. |
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மேல் |