காஞ்சி |
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய், |
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் |
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப் |
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர், |
|
5 |
வதுவை நாற்றம் புதுவது கஞல, |
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில் |
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும் |
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ, |
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண், |
|
10 |
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் |
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன, |
|
இகழுநர் இகழா இள நாள் அமையம் |
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின் |
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, |
|
15 |
வாராமையின் புலந்த நெஞ்சமொடு, |
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என, |
|
மெல்லிய இனிய கூறி, வல்லே |
|
வருவர் வாழி தோழி! பொருநர் |
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் |
|
20 |
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன், |
இன் இசை இயத்தின் கறங்கும் |
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே. |
|
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் | |
உரை |
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப் |
|
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல், |
|
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு |
|
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும் |
|
5 |
பெரு நீர் வையை அவளொடு ஆடி, |
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின் |
|
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் |
|
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி |
|
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் |
|
10 |
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் |
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன், |
|
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய |
|
மலிதரு கம்பலை போல, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே. |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார் | |
உரை |
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் |
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, |
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் |
|
5 |
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், |
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் |
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் |
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் |
|
காஞ்சி நீழல் குரவை அயரும் |
|
10 |
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் |
தேர் தர வந்த நேர் இழை மகளிர் |
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே |
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் |
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே; |
|
15 |
தாமும் பிறரும் உளர்போல் சேறல் |
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், |
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் |
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, |
|
என்னொடு திரியானாயின், வென் வேல் |
|
20 |
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் |
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, |
|
ஆரியர் படையின் உடைக, என் |
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே! |
|
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் | |
உரை |
உய் தகை இன்றால் தோழி! பைபய, |
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும் |
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; |
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் |
|
5 |
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், |
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், |
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, |
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, |
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் |
|
10 |
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், |
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், |
|
யாணர் வேனில்மன், இது |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே? |
|
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
மேல் |