காந்தள்(கோடல், தோன்றி) |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
|
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
உரை |
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, |
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று, |
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி, |
|
மராஅ யானை மதம் தப ஒற்றி, |
|
5 |
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் |
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, |
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து |
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப! |
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள், |
|
10 |
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் |
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் |
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால், |
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் |
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை, |
|
15 |
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், |
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை |
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய் |
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே. |
|
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர் | |
உரை |
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல், |
|
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி; |
|
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை |
|
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, |
|
5 |
காடே கம்மென்றன்றே; அவல, |
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர், |
|
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை |
|
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ, |
|
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே; |
|
10 |
அனையகொல் வாழி, தோழி! மனைய |
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும் |
|
மௌவல், மாச் சினை காட்டி, |
|
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், |
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, |
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் |
|
5 |
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, |
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், |
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், |
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் |
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென |
|
10 |
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் |
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, |
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், |
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! |
|
15 |
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று |
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, |
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, |
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, |
|
20 |
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, |
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி |
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த |
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
|
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் | |
உரை |
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் |
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல் |
|
5 |
வாரல் வாழியர், ஐய! நேர் இறை |
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் |
|
காவல் கண்ணினம் தினையே; நாளை |
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் |
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், |
|
10 |
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, |
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் |
|
திருமணி விளக்கின் பெறுகுவை |
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே. |
|
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் | |
உரை |
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய |
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, |
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல், |
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் |
|
5 |
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, |
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், |
|
ஐது படு கொள்ளி அங்கை காய, |
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி |
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, |
|
10 |
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் |
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து |
|
ஆர்வம் சிறந்த சாயல், |
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார் | |
உரை |
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு |
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் |
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப் |
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி |
|
5 |
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் |
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் |
|
10 |
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
அருளான் வாழி, தோழி! அல்கல் |
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் |
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், |
|
காயா மென் சினை தோய நீடிப் |
|
15 |
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி |
|
கை ஆடு வட்டின் தோன்றும் |
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, |
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி |
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், |
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, |
|
5 |
வால் நிணப் புகவின், கானவர் தங்கை |
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் |
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், |
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! |
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் |
|
10 |
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை |
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் |
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை |
|
இருங் கவுட் கடாஅம் கனவும், |
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே. |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! |
|
குவளை உண்கண் தெண் பனி மல்க, |
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை |
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் |
|
5 |
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, | |
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், |
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் |
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, |
|
10 |
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் |
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு |
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் |
|
15 |
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், |
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் |
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி |
|
நல் நிறம் மருளும் அரு விடர் |
|
20 |
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் | |
உரை |
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
|
5 |
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
|
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
|
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
|
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | |
உரை |
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் |
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை |
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, |
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி |
|
5 |
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, |
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன |
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, |
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக் |
|
காமர் துணையொடு ஏமுற வதிய, |
|
10 |
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; |
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் |
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப |
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு |
|
நம் வயிற் புரிந்த கொள்கை |
|
15 |
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் | |
உரை |
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு |
|
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி, |
|
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் |
|
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்; |
|
5 |
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் |
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற. |
|
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம். |
|
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி, |
|
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு |
|
10 |
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் |
இது நற் காலம்; கண்டிசின் பகைவர் |
|
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின், |
|
கந்து கால் ஒசிக்கும் யானை, |
|
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே! |
|
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் | |
உரை |
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, |
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, |
|
துவலை தூவல் கழிய, அகல் வயல் |
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் |
|
5 |
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை |
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய |
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, |
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, |
|
10 |
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென |
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, |
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, |
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் |
|
15 |
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த |
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, |
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, |
|
எயிறு தீப் பிறப்பத் திருகி, |
|
20 |
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு |
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, |
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, |
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, |
|
5 |
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், |
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், |
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, |
|
படாஅவாகும், எம் கண்' என, நீயும், |
|
10 |
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் |
|
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், |
|
வர எளிதாக எண்ணுதி; அதனால், |
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் |
|
15 |
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
அடைய முயங்கேம்ஆயின், யாமும் |
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே |
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய் |
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! |
|
20 |
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
ஒண் பூ வேங்கை கமழும் |
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து |
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், |
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? |
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, |
|
5 |
விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, |
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி |
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, |
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ |
|
10 |
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் |
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ |
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, |
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, |
|
15 |
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, |
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு |
|
தொல் நலம் சிதையச் சாஅய், |
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், |
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, |
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள், |
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த |
|
5 |
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, |
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற, |
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு, |
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி, |
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் |
|
10 |
பெருங் கல் நாட! பிரிதிஆயின், |
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு |
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும் |
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ், |
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி |
|
15 |
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, |
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் |
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த |
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே? | |
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன, |
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர, |
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் |
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர், |
|
5 |
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, |
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர, |
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து, |
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக, |
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி, |
|
10 |
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் |
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை |
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக் |
|
காய் சின யானை கங்குல் சூழ, |
|
அஞ்சுவர இறுத்த தானை |
|
15 |
வெஞ் சின வேந்தன் பாசறையோரே? |
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார் | |
உரை |
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, |
|
இரவின் வரூஉம் இடும்பை நீங்க, |
|
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, |
|
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், |
|
5 |
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, |
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப் |
|
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக, |
|
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி! |
|
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
|
10 |
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார் |
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, |
|
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த |
|
அடு புகழ் எஃகம் போல, |
|
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே! |
|
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் |
|
மறம் கெழு தானை அரசருள்ளும், |
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர் |
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள், |
|
5 |
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் |
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன், |
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல், |
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற |
|
10 |
முயங்கல் இயையாதுஆயினும், என்றும், |
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக, |
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் |
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன் |
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல, |
|
15 |
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் |
அறாஅலியரோ, தூதே பொறாஅர் |
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள், |
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன், |
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து, |
|
20 |
வழங்கல் ஆனாப் பெருந் துறை |
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே! |
|
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் | |
உரை |
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், |
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, |
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் |
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக |
|
5 |
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய |
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, |
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் |
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் |
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், |
|
10 |
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் |
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, |
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் |
|
கழியாமையே வழிவழிப் பெருகி, |
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல் |
|
15 |
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், |
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் |
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும் |
|
உள்ளி விழவின் அன்ன, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |