காயாம்பூ |
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி, |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு |
|
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய |
|
5 |
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, |
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள, |
|
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர் |
|
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர, |
|
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் |
|
10 |
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, |
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
மாலையும் உள்ளார்ஆயின், காலை |
|
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற |
|
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன், |
|
15 |
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, |
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து, |
|
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே |
|
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக, |
|
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் |
|
20 |
கார் மழை முழக்கு இசை கடுக்கும், |
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே. |
|
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார் | |
உரை |
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
|
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
|
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
|
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி, |
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு, |
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ, |
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி, |
|
5 |
தாழ்ந்த போல நனி அணி வந்து, |
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி, |
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர் |
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன |
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல |
|
10 |
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை, |
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில், |
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி, |
|
மணி மண்டு பவளம் போல, காயா |
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய, |
|
15 |
கார் கவின் கொண்ட காமர் காலை, |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், |
|
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே! |
|
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
மேல் |