குருந்தம்பூ |
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
|
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
|
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
|
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
மேல் |