கொன்றை |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
|
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
உரை |
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் |
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும் |
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் |
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; |
|
5 |
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் |
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் |
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள் |
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் |
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய |
|
10 |
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் |
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று |
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை, |
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை, |
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி |
|
15 |
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, |
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு, |
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக் |
|
கூடாமையின், நீடியோரே. |
|
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும், |
|
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும், |
|
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த |
|
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் |
|
5 |
இனையல் வாழி, தோழி! முனை எழ |
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், |
|
மறம் மிகு தானை, கண்ணன் எழினி |
|
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும், |
|
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ |
|
10 |
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் |
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் |
|
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு, |
|
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு |
|
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர, |
|
15 |
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, |
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் |
|
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு |
|
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார் | |
உரை |
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து, |
|
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு |
|
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க, |
|
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன |
|
5 |
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன் |
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ, |
|
முல்லை இல்லமொடு மலர, கல்ல |
|
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர, |
|
கார் தொடங்கின்றே காலை; காதலர் |
|
10 |
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை, |
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்; |
|
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக் |
|
கொலை குறித்தன்ன மாலை |
|
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே! |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் | |
உரை |
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர, |
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ, |
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை |
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய |
|
5 |
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, |
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான், |
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று, |
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க, |
|
நன்று புறமாறி அகறல், யாழ நின் |
|
10 |
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? |
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி, |
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் |
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி, |
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி, |
|
15 |
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, |
நொதுமலாளர்; அது கண்ணோடாது, |
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, |
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர் |
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை |
|
20 |
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் |
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ? |
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து, |
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை |
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர் |
|
25 |
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! |
காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார் | |
உரை |
மேல் |