செங்கழுநீர் |
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள், |
|
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு, |
|
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம் |
|
யானும் தெற்றென உணரேன். மேல் நாள், |
|
5 |
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு |
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி, |
|
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற |
|
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் |
|
ஊசி போகிய சூழ் செய் மாலையன், |
|
10 |
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், |
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி, |
|
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு, |
|
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என |
|
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு, |
|
15 |
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, |
நாணி நின்றனெமாக, பேணி, |
|
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் |
|
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் |
|
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப் |
|
20 |
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, |
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச் |
|
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே. |
|
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து, |
|
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன் |
|
25 |
மகனே தோழி!' என்றனள். |
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே. |
|
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால் முடக் கொற்றனார் | |
உரை |
மேல் |