நீர்முள்ளி |
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, |
|
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர் |
|
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும் |
|
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப் |
|
5 |
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல் |
பெருங் கதவு பொருத யானை மருப்பின் |
|
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, |
|
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி |
|
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி, |
|
10 |
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று |
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே |
|
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ, |
|
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை |
|
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் |
|
15 |
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே; |
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக் |
|
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச் |
|
செவிலி கை என் புதல்வனை நோக்கி, |
|
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ |
|
20 |
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என் |
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு, |
|
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய், |
|
சிறு புறம் கவையினனாக, உறு பெயல் |
|
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய் |
|
25 |
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே |
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே? |
|
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி | |
உரை |
மேல் |