நீலம் |
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், |
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், |
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் |
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, |
|
5 |
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். |
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் |
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று |
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் |
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி, |
|
10 |
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் |
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை |
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல் |
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி |
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; |
|
15 |
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு |
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக் |
|
கூஉம் கணஃது எம் ஊர்' என |
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
|
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
உரை |
மேல் |