நுணாப்பூ |
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி, |
|
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண் |
|
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க் |
|
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால், |
|
5 |
பல் படைப் புரவி எய்திய தொல் இசை |
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய |
|
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து, |
|
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் |
|
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் |
|
10 |
சில் நாள் கழிக!' என்று முன் நாள் |
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு |
|
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார், |
|
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப, |
|
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய |
|
15 |
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த |
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச் |
|
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப, |
|
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு |
|
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் |
|
20 |
கல் கண் சீக்கும் அத்தம், |
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே! |
|
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
மேல் |