பனம்பூ(போழ்) |
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன், |
|
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த |
|
இனிய உள்ளம் இன்னாஆக, |
|
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் |
|
5 |
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் |
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல் |
|
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி, |
|
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் |
|
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ, |
|
10 |
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து, |
ஓவத்தன்ன வினை புனை நல் இல், |
|
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் |
|
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ, |
|
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து, |
|
15 |
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், |
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர் |
|
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா, |
|
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன் |
|
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன் |
|
20 |
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், |
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய |
|
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக |
|
ஆடிய பின்னும், வாடிய மேனி |
|
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை |
|
25 |
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, |
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி, |
|
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே, |
|
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக் |
|
கான் கெழு நாடன் கேட்பின், |
|
30 |
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார் | |
உரை |
மேல் |