பிச்சி(பித்திகம்) |
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் |
|
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச் |
|
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண், |
|
தளிர் ஏர் மேனி, மாஅயோயே! |
|
5 |
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச, |
கோடை நீடிய பைது அறு காலை, |
|
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும் |
|
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல் |
|
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி, |
|
10 |
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, |
பல்லோர் உவந்த உவகை எல்லாம் |
|
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை |
|
ஓங்கித் தோன்றும் உயர் வரை |
|
வான் தோய் வெற்பன் வந்தமாறே |
|
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர் | |
உரை |
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப, |
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின், |
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை, |
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி, |
|
5 |
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் |
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி, |
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும் |
|
கல்லுடை அதர கானம் நீந்தி, |
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் |
|
10 |
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து |
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல் |
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும், |
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து, |
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத் |
|
15 |
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், |
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும் |
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும், |
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ |
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் |
|
20 |
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், |
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின் |
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
மேல் |