பிடவம் |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
வள மழை பொழிந்த வால் நிறக் களரி, |
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் |
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், |
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் |
|
5 |
கை மாண் தோணி கடுப்ப, பையென, |
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் |
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே, |
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, |
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி |
|
10 |
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, |
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! |
|
பயப்புறு படர் அட வருந்திய |
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
மேல் |