புன்னை |
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, |
|
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த, |
|
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, |
|
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப! |
|
5 |
நெய்தல் உண்கண் பைதல கலுழ, |
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும் |
|
அரிது உற்றனையால் பெரும! உரிதினின் |
|
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு |
|
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் |
|
10 |
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் |
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி, |
|
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் |
|
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. |
|
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார் | |
உரை |
நின் வாய் செத்து நீ பல உள்ளி, |
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், |
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் |
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் |
|
5 |
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று |
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, |
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர் |
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, |
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், |
|
10 |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் |
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், |
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் |
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி |
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், |
|
15 |
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி, |
திதியனொடு பொருத அன்னி போல |
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச் |
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய |
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் |
|
20 |
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், |
மின் நேர் மருங்குல், குறுமகள் |
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
உரை |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
கானலும் கழறாது; கழியும் கூறாது; |
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; |
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; |
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் |
|
5 |
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, |
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, |
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே, |
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் |
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் |
|
10 |
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு |
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் |
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, |
|
'நின் உறு விழுமம் களைந்தோள் |
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. |
|
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | |
உரை |
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த |
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப் |
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், |
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, |
|
5 |
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! |
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த |
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு, |
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம், |
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின், |
|
10 |
தீதும் உண்டோ, மாதராய்?' என, |
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர் |
|
கை வல் பாகன் பையென இயக்க, |
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில் |
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி, |
|
15 |
சிறிய இறைஞ்சினள், தலையே |
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே. |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் |
|
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை |
|
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, |
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் |
|
5 |
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் |
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, |
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் |
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, |
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும், |
|
10 |
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, |
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, |
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட |
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், |
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில், |
|
15 |
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. |
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார் | |
உரை |
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர் |
|
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை |
|
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப, |
|
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர, |
|
5 |
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, |
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி, |
|
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன், |
|
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும் |
|
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு |
|
10 |
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், |
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி, |
|
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு |
|
துறையும் துஞ்சாது, கங்குலானே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் | |
உரை |
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
|
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
|
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
|
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் | |
உரை |
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற |
|
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும், |
|
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து, |
|
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின், |
|
5 |
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு |
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும் |
|
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட, |
|
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின், |
|
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால், |
|
10 |
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! |
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப் |
|
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக் |
|
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க |
|
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த |
|
15 |
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து |
உரும் இசைப் புணரி உடைதரும் |
|
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே. |
|
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, |
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் |
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் |
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் |
|
5 |
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து |
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல, |
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, |
|
வந்த மாலை பெயரின், மற்று இவள் |
|
10 |
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா |
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, |
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் |
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, |
|
15 |
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை |
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என |
|
நல் மலர் நறு வீ தாஅம் |
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
|
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார் | |
உரை |
மேல் |