முருங்கை |
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், |
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய |
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, |
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், |
|
5 |
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் |
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த |
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் |
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, |
|
10 |
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், |
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் |
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, |
|
15 |
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் |
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, |
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் |
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார் | |
உரை |
அறியாய், வாழி தோழி! இருள் அற |
|
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் |
|
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, |
|
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், |
|
5 |
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு |
|
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் |
|
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை |
|
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், |
|
10 |
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் |
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் |
|
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், |
|
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் |
|
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் |
|
15 |
பொருளே காதலர் காதல்; |
'அருளே காதலர்' என்றி, நீயே. |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! 'இம்மை |
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் |
|
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? |
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த |
|
5 |
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் |
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் |
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, |
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து |
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி, |
|
10 |
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், |
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, |
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல, |
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று |
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை, |
|
15 |
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், |
தண் கார் ஆலியின், தாவன உதிரும் |
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு |
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே! |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
மேல் |