வேங்கை |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; |
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, |
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; |
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், |
|
5 |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், |
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, |
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், |
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, |
|
10 |
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், |
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் |
|
நல் வரை நாட! நீ வரின், |
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
|
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், |
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், |
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் |
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, |
|
5 |
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். |
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் |
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று |
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் |
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி, |
|
10 |
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் |
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை |
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல் |
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி |
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; |
|
15 |
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு |
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக் |
|
கூஉம் கணஃது எம் ஊர்' என |
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
|
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
உரை |
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள், |
|
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு, |
|
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம் |
|
யானும் தெற்றென உணரேன். மேல் நாள், |
|
5 |
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு |
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி, |
|
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற |
|
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் |
|
ஊசி போகிய சூழ் செய் மாலையன், |
|
10 |
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், |
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி, |
|
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு, |
|
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என |
|
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு, |
|
15 |
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, |
நாணி நின்றனெமாக, பேணி, |
|
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் |
|
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் |
|
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப் |
|
20 |
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, |
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச் |
|
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே. |
|
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து, |
|
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன் |
|
25 |
மகனே தோழி!' என்றனள். |
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே. |
|
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால் முடக் கொற்றனார் | |
உரை |
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், |
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் |
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் |
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின், |
|
5 |
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் |
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் |
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் |
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன் |
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு |
|
10 |
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என |
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் |
|
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை |
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் |
|
ஆய்மலர் உண்கண் பசலை |
|
15 |
காம நோய்' எனச் செப்பாதீமே. |
தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார் | |
உரை |
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், |
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் |
|
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து, |
|
5 |
ஆழல் வாழி, தோழி! 'சாரல், |
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, |
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை |
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் |
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, |
|
10 |
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை |
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை |
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, |
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், |
|
வருதும், யாம்' எனத் தேற்றிய |
|
15 |
பருவம்காண் அது; பாயின்றால் மழையே. |
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், |
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி, |
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, |
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, |
|
5 |
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, |
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, |
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் |
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய |
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள் |
|
10 |
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். |
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள் |
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல் |
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்; |
|
அளியள்தான், நின் அளி அலது இலளே! |
|
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர் | |
உரை |
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, |
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி |
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், |
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, |
|
5 |
வால் நிணப் புகவின், கானவர் தங்கை |
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் |
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், |
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! |
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் |
|
10 |
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை |
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் |
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை |
|
இருங் கவுட் கடாஅம் கனவும், |
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே. |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
|
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
|
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
|
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
|
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
|
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
|
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு |
|
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
|
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் | |
உரை |
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த |
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன |
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை |
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, |
|
5 |
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, |
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை |
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் |
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை, |
|
வெள்ளி வீதியைப் போல நன்றும் |
|
10 |
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, |
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, |
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! |
|
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து, |
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும் |
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என, |
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் |
|
5 |
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை |
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து, |
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ |
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து, |
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள், |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை |
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள, |
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள், |
|
நல் மணல் வியலிடை நடந்த |
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, |
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, |
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் |
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி, |
|
5 |
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
வேட்டம் போகிய குறவன் காட்ட |
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, |
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! |
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து |
|
10 |
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், |
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், |
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய |
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, |
|
15 |
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் |
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும் |
|
பெரு வரை நண்ணிய சாரலானே. |
|
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர் | |
உரை |
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ! |
|
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ, |
|
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து |
|
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் |
|
5 |
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் |
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும் |
|
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் |
|
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என |
|
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி, |
|
10 |
பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, |
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும், |
|
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும், |
|
குறமகள் காக்கும் ஏனல் |
|
புறமும் தருதியோ? வாழிய, மழையே! |
|
இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வீரை வெளியன் தித்தனார் | |
உரை |
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், |
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, |
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை |
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், |
|
5 |
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் |
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, |
|
சிறு பல் மின்மினி போல, பல உடன் |
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட! |
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள், |
|
10 |
உத்தி அரவின் பைத் தலை துமிய, |
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, |
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, |
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி |
|
தேராது வரூஉம் நின்வயின் |
|
15 |
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? |
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் |
|
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, |
|
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப் |
|
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, |
|
5 |
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே |
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, |
|
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே |
|
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை |
|
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, |
|
10 |
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, |
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் |
|
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன |
|
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற |
|
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல |
|
15 |
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, |
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில், |
|
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ |
|
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி, |
|
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து, |
|
20 |
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, |
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை |
|
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் |
|
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர் | |
உரை |
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு |
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, |
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, |
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, |
|
5 |
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், |
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், |
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, |
|
படாஅவாகும், எம் கண்' என, நீயும், |
|
10 |
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் |
|
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், |
|
வர எளிதாக எண்ணுதி; அதனால், |
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் |
|
15 |
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
அடைய முயங்கேம்ஆயின், யாமும் |
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே |
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய் |
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! |
|
20 |
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
ஒண் பூ வேங்கை கமழும் |
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே; |
|
திதலை அல்குல் வரியும் வாடின; |
|
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண் |
|
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி, |
|
5 |
இனையல் வாழி, தோழி! நனை கவுள் |
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு |
|
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப் |
|
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப, |
|
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் |
|
10 |
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து, |
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் |
|
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ, |
|
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள், |
|
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின், |
|
15 |
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை, |
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் |
|
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் |
|
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர், |
|
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர், |
|
20 |
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, |
எல் உமிழ் ஆவணத்து அன்ன, |
|
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
உரை |
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென |
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித் |
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், |
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் |
|
5 |
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, |
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே |
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல |
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் |
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, |
|
10 |
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் |
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் |
|
இரும் பிடி இரியும் சோலைப் |
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார் | |
உரை |
காண் இனி வாழி, தோழி! பானாள், |
|
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், |
|
மாஅல் யானை புலி செத்து வெரீஇ, |
|
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் |
|
5 |
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, |
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், |
|
மன்ற வேங்கை மண நாட் பூத்த |
|
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் |
|
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர் |
|
10 |
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் |
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும், |
|
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை |
|
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி, |
|
'முருகு' என வேலற் தரூஉம். |
|
15 |
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. |
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
உரை |
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் |
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது |
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு |
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, |
|
5 |
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் |
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ் |
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு |
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ, |
|
10 |
அறியா வேலற் தரீஇ, அன்னை |
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, |
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், |
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை |
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், |
|
15 |
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் |
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி! |
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் |
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் |
|
20 |
சாந்த மென் சினை தீண்டி, மேலது |
பிரசம் தூங்கும் சேண் சிமை |
|
வரையக வெற்பன் மணந்த மார்பே! |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார் | |
உரை |
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் |
|
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த |
|
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை |
|
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் |
|
5 |
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய |
காமம் கலந்த காதல் உண்டுஎனின், |
|
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; |
|
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின், |
|
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே |
|
10 |
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, |
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த |
|
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி, |
|
செய்து பின் இரங்கா வினையொடு |
|
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே! |
|
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
|
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, |
|
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
|
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை |
|
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை, |
|
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ |
|
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை, |
|
5 |
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல், |
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்! |
|
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின், |
|
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக் |
|
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து, |
|
10 |
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி |
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க் |
|
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர், |
|
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும், |
|
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து, |
|
15 |
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் |
கொந்தொடு உதிர்த்த கதுப்பின், |
|
அம் தீம் கிளவித் தந்தை காப்பே. |
|
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து, |
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச் |
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ, |
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி |
|
5 |
ஏதில் வேலன் கோதை துயல்வரத் |
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்; |
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து, |
|
இரவின் மேயல் மரூஉம் யானைக் |
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள், |
|
10 |
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் |
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் |
|
உடு உறு கணையின் போகி, சாரல் |
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ, |
|
பலவின் பழத்துள் தங்கும் |
|
15 |
மலை கெழு நாடன் மணவாக்காலே! |
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு |
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி, |
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட, |
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை |
|
5 |
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் |
தண் துளி அசைவளி தைவரும் நாட! |
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது, |
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது, |
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை |
|
10 |
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், |
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி, |
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ, |
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண் |
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே |
|
15 |
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை |
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் |
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள், |
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், |
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு, |
|
20 |
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் |
நீடலர் ஆகி வருவர், வல்லென; |
|
கங்குல் உயவுத் துணை ஆகிய |
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
சிலம்பில் போகிய செம் முக வாழை |
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், |
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் |
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், |
|
5 |
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் |
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் |
|
அரிய போலும் காதல் அம் தோழி! |
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
|
10 |
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, |
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் |
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, |
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, |
|
15 |
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை |
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, |
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் |
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் |
|
5 |
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, |
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென |
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, |
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய |
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, |
|
10 |
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் |
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் |
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் |
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், |
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், |
|
15 |
'செல்வேம்' என்னும் நும் எதிர், |
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! |
|
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி, |
|
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண் |
|
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க் |
|
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால், |
|
5 |
பல் படைப் புரவி எய்திய தொல் இசை |
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய |
|
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து, |
|
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் |
|
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் |
|
10 |
சில் நாள் கழிக!' என்று முன் நாள் |
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு |
|
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார், |
|
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப, |
|
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய |
|
15 |
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த |
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச் |
|
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப, |
|
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு |
|
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் |
|
20 |
கல் கண் சீக்கும் அத்தம், |
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே! |
|
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப, |
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு |
|
சினவல் போகிய புன்கண் மாலை, |
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த |
|
5 |
கான யானைக் கதுவாய் வள் உகிர், |
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண், |
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை, |
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா |
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே |
|
10 |
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு |
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல் |
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண், |
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத் |
|
தண் கமழ் புது மலர் நாறும் |
|
15 |
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே. |
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
|
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
|
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
|
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
|
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி நம் மலை |
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், |
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத |
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் |
|
5 |
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ |
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, |
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி |
|
இன் இசை ஓரா இருந்தனமாக, |
|
10 |
'மை ஈர் ஓதி மட நல்லீரே! |
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, |
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் |
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என, |
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, |
|
15 |
சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, |
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், |
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என, |
|
அன்னை தந்த முது வாய் வேலன், |
|
20 |
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின், |
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின |
|
மையல் வேழ மெய் உளம்போக, |
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு |
|
25 |
காட்டு மான் அடி வழி ஒற்றி, |
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே? |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார் | |
உரை |
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர, |
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ, |
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை |
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய |
|
5 |
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, |
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான், |
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று, |
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க, |
|
நன்று புறமாறி அகறல், யாழ நின் |
|
10 |
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? |
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி, |
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் |
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி, |
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி, |
|
15 |
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, |
நொதுமலாளர்; அது கண்ணோடாது, |
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, |
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர் |
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை |
|
20 |
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் |
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ? |
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து, |
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை |
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர் |
|
25 |
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! |
காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார் | |
உரை |
மேல் |