பயறு |
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் |
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் |
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், |
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, |
|
5 |
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, |
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை |
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் |
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து, |
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை |
|
10 |
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, |
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, |
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் |
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை |
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய |
|
15 |
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, |
மருதமர நிழல், எருதொடு வதியும் |
|
காமர் வேனில்மன் இது, |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! |
|
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் |
|
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், |
|
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் |
|
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, |
|
5 |
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட |
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து |
|
ஆண்மை வாங்க, காமம் தட்ப, |
|
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, |
|
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, |
|
10 |
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; |
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு |
|
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் |
|
வாழ்தல் அன்ன காதல், |
|
சாதல் அன்ன பிரிவு அரியோளே! |
|
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார் | |
உரை |
மேல் |