வரகு |
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, |
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் |
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, |
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், |
|
5 |
வித்திய மருங்கின் விதை பல நாறி, |
இரலை நல் மானினம் பரந்தவைபோல், |
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர், |
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, |
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின் |
|
10 |
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, |
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை |
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக் |
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த |
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, |
|
15 |
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் |
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக் |
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி, |
|
விரிஉளை, நல் மான் கடைஇ |
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே. |
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூர, தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார் | |
உரை |
'பனி வார் உண்கணும், பசந்த தோளும், |
|
நனி பிறர் அறியச் சாஅய், நாளும், |
|
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார், |
|
நீடினர்மன்னோ, காதலர்' என நீ |
|
5 |
எவன் கையற்றனை? இகுளை! அவரே |
வானவரம்பன் வெளியத்து அன்ன நம் |
|
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது, |
|
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர், |
|
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு, |
|
10 |
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை |
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும், |
|
பொய்யா நல் இசை மா வண் புல்லி, |
|
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள் |
|
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை |
|
15 |
அருவித் துவலையொடு மயங்கும் |
பெரு வரை அத்தம் இயங்கியோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார் | |
உரை |
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, |
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, |
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, |
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, |
|
5 |
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், |
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் |
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, |
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை |
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
10 |
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், |
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன |
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் |
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம |
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் |
|
15 |
உயிர் குழைப்பன்ன சாயல், |
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென, |
|
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும் |
|
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த |
|
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய், |
|
5 |
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், |
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண், |
|
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ, |
|
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே; |
|
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ? |
|
10 |
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? |
உரைமதி வாழியோ, வலவ!' என, தன் |
|
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி, |
|
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை; |
|
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே. |
|
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார் | |
உரை |
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி, |
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து |
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய, |
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக் |
|
5 |
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, |
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை |
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ, |
|
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர் |
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப, |
|
10 |
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் |
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி, |
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை, |
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா, |
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி, |
|
15 |
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், |
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம், |
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும் |
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி |
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர், |
|
20 |
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர் |
நீடலர் வாழி, தோழி! தோடு கொள் |
|
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப, |
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி, |
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ் |
|
25 |
வேனில் அதிரல் வேய்ந்த நின் |
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
மேல் |