394. முல்லை |
களவும் புளித்தன; விளவும் பழுநின; |
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், |
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, |
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து |
|
5 |
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு |
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, |
|
இளையர் அருந்த, பின்றை, நீயும் |
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர், |
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், |
|
10 |
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, |
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், |
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ |
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் |
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் |
|
15 |
மன்ற இரும் புதல் ஒளிக்கும் |
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. |
|
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார் | |
உரை |
மேல் |