380. நெய்தல் |
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும் |
|
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி, |
|
முன் நாள் போகிய துறைவன், நெருநை, |
|
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த |
|
5 |
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், |
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம் |
|
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என, |
|
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே; |
|
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; |
|
10 |
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது |
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்; |
|
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ? |
|
அம்ம, தோழி! கூறுமதி நீயே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |