பாகல்கனி |
எம் வெங் காமம் இயைவது ஆயின், |
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் |
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த |
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் |
|
5 |
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, |
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் |
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர், |
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல |
|
தோழிமாரும் யானும் புலம்ப, |
|
10 |
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் |
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் |
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, |
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் |
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, |
|
15 |
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, |
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் |
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு |
|
குன்ற வேயின் திரண்ட என் |
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே! |
|
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும், |
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப் |
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் |
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து |
|
5 |
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் |
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின் |
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் |
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை, |
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ, |
|
10 |
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை |
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் |
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், |
|
வல்லே வருவர்போலும் வெண் வேல் |
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர் |
|
15 |
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த |
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின் |
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின் |
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த |
|
அணங்குடை வன முலைத் தாஅய நின் |
|
20 |
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார் | |
உரை |
மேல் |