2. குறிஞ்சி |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
மேல் |